நிம்மதியான வாழ்க்கையை இழக்காதீங்க! நிபுணர்களின் அறிவுரை!!
இன்றைக்கு ஊடகங்களின் மிக முக்கிய செய்தியே கள்ளக்காதல் கொலைகளும், தற்கொலைகளும்தான். கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் புதிதாக ஒரு காதலில் விழ நேரிட்டால் இரண்டு குடும்பங்களின் நிம்மதியும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இதுபோன்ற தவறான உறவுகள் ஏற்பட என்ன காரணம், இதனால் எந்தமாதிரியான சிக்கல்கள் எழும் என்று உளவியல் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்கள். இளம் வயதில் காதல் ஏற்படுவது இயல்பானது. அதே சமயம் திருமண வாழ்க்கையில் திருப்தியில்லாமலோ, புதிதாக ஒருவரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல்வயப்படுவதோ இயற்கைக்கு முரணானது என்கின்றனர். அத்தகைய உறவுக்கு காதல் என்று பெயர் சூட்டினாலும் அதனை சமுதாயத்தில் வெளிப்படையாக யாராலும் தெரிவிக்க முடியாது என்பதே நிபுணர்களின் அறிவுரை. திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்த பின்னரும் பிறன்மனை நோக்குவது மோசமானதும் அருவெறுப்பானதும் என்று கூறுகின்றனர். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயல் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது போன்ற மரபு மீறிய உறவுகள் நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்றன என்றாலும் சமீபத்தில் பல்கிக் பெர...