ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)
ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?) உடலின் பிற பகுதிகளைப் போலவே ஆணுறுப்பு, தொடை இடுக்கு, விந்தகங்கள் ஆகிய பகுதிகளும் மாசடைகின்றன. இந்தப் பகுதிகளில் எண்ணற்ற வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் பிற பகுதிகளை விட இந்தப் பகுதிகளில் அதிகமாக வியர்வை சுரக்கிறது. இனப்பெருக்க உறுப்பு ஆசனவாய்க்கு அருகிலேயே இருப்பதால், மலத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் ஆணுறுப்பை அடைய அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் பகுதிகளில் இருக்கும் ரோமங்கள் வியர்வையுடன் சேர்ந்து பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவலாம். ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில், வெள்ளை நிறத்தில் எண்ணெய் மற்றும் துகள்கள் படிந்து சேரலாம். இது “ஸ்மெக்மா” எனப்படுகிறது. முனைத்தோலை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் ஸ்மெக்மா அதிகமாகச் சேர்ந்து முனைத்தோல் அழற்சி மற்றும் ஆணுறுப்பு மொட்டு அழற்சி போன்ற தொற்றுகள் ஏற்படலாம். உடலுறவுக்குப் பிறகு ஆணுறுப்பை சுத்தம் செய்வதால் பால்வினை நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். ஆணுறுப்பைக் கழுவும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Things to remember when wash...