கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…
பெண்ணின் பெருங்கனவு!! பெண்ணின் பெருங்கனவு!! கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு… ‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும். ஓர் ஆண் ‘உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவேன்’ என்று சொல்லும்போதும் பெண் மனம் இவனை நம்பலாமா, எந்தளவுக்கு நம்பலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும். இவ்வளவு கேள்விகளுக்கும் ஒருவன் சரியான விடையளித்து பாஸாகி விட்டாலும், அவனோடு இணைந்து வாழத் துவங்கும்போதும் பெண் தனது காமத்தீயின் வெப்பத்தை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. அவளது காமத்தீயை முழுவதுமாக உணர்ந்து, அணைத்து, ஆண்மை மழையில் நனைந்து அவளை இன்புறச் செய்யும் தருணங்கள் அவளை நன்றிக்குரியவளாக மாற்றுகிறது. தன் துணையை உச்சகட்ட இன்பம் என்கிற ஆர்கஸம் வரை அழைத்துச் சென்று அன்பு செய்யும் ஆணுக்கு இது அதிகம் கிட்டும். ஒவ்வொரு முறை தாம்பத்ய உறவுக்கான முனைப்பின்போது பெண் ஆர்கஸம் அடையும் வரை காத்திருந்து, அதற்கான வித்தைகளை அரங்கேற்றும் அளவுக்கு விழிப்புணர்வும், அன்பும் இ...